search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"

    • மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது.
    • புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது. போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 610 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலூர் துறைமுகத்தில் தூர புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுப உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் ஒரு சில மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரத்தில் அரசு நிபந்தனைக்குட்பட்டு மீன்பிடித்து வந்தனர். தற்போது வழக்கத்தை விட கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் அதிகளவில் காற்று வீசப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் எந்த வித அசம்பாவதமும் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
    • காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் நேற்று மாலையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர். அதையும் மீறி கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.

    இந்த நிலையில் கோவளம் கடற்கரையில் நடந்து வரும் பாய்மர படகு போட்டியும், அப்பகுதி கடல் சீற்றம் காரணமாக நேற்று நிறுத்தப்பட்டது. அதையும் மீறி சில வீரர்கள் பயிற்சிக்காக கடலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். அதில் கடல் அலையில் சிக்கி ஒரு படகின் விலை உயர்ந்த பாய்மரம் கிழிந்தது. கடலோர காவல்படை வீரர்கள் அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர்.

    இன்று காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது. புயல் எச்சரிக்கை இருப்பதால் போட்டி நடைபெறும் இடத்தில் கூடுதலாக கடலோர காவல்படை நீச்சல் வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும்.
    • பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது

    குளச்சல்:

    குளச்சல் சுற்று வட்டார கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படும்.

    தற்போது மே மாதமே கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் அலைகளின் உக்கிரமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் இன்றும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கட்டுமரங்களும் குறைந்த அளவே கடலுக்கு சென்றன.

    குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும். தற்போது கடல் சீற்றமாக காணப்படுவதால் மேடான பகுதியில் உள்ள மேடுகளை கடல் அலை மணல்களை இழுத்து செல்லப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

    குளச்சல் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதை காணலாம்.

    • வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
    • அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் சுற்று வட்டார கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படும்.

    தற்போது மே மாதமே கடல் சீற்றமாக காணப்படு கிறது. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் அலைகளின் உக்கிரமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் இன்றும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கட்டுமரங்களும் குறைந்த அளவே கடலுக்கு சென்றன.

    குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும். தற்போது கடல் சீற்றமாக காணப்படு வதால் மேடான பகுதியில் உள்ள மேடுகளை கடல் அலை மணல்களை இழுத்து செல்லப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது

    • கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சீற்றம் காரணமாக குமரி மேற்கு கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
    • கன்னியாகுமரி கடல் பகுதியிலும் இன்று கடல் சீற்றம் காணப்பட்டது.

    குளச்சல்:

    கேரளாவின் அரபிக்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடலில் சூறைக்காற்றும், அலைகளின் கொந்தளிப்பும் அதிகமாக காணப்பட்டது.

    இதுதொடர்பாக கேரள கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அங்குள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் கூறியிருந்தனர்.

    கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சீற்றம் காரணமாக குமரி மேற்கு கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இதனால் குளச்சல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற படகுகள் கரை திரும்பி வருகின்றன. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் உள்ளன.

    இதில் கரை திரும்பிய படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல கட்டுமரங்கள், வள்ளங்களும் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 2-வது நாளாகவும் குளச்சலில் கடலுக்குள் பயங்கர சூறைக்காற்று வீசியது. அலைகளும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக 2-வது நாளாக இன்றும் விசை படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    குறைந்த அளவிலேயே கட்டுமரங்களும், வள்ளங்களும் மீன்பிடிக்க சென்றன. அவையும் அவசரமாக கரை திரும்பியது.

    விசைபடகுகள் மற்றும் கட்டுமரங்கள், வள்ளங்கள் அவசரமாக கரை திரும்பியதால் குறைந்த அளவே மீன்கள் பிடிப்பட்டன. குறிப்பாக சூறை, புல்லன் இறால் போன்ற மீன்களையே மீனவர்கள் பிடித்து வந்தனர்.

    அவற்றை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். போதிய மீன்வரத்து இல்லாததால் மீனவர்களும், வியாபாரிகளும் கவலை அடைந்தனர்.

    கன்னியாகுமரி கடல் பகுதியிலும் இன்று கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த 6-ந் தேதிதான் திறக்கப்பட்டது. இப்போது கடல் சீற்றம் காரணமாக அங்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
    • கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது.

    தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசி வந்த நிலையில் இன்று கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது

    இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பைபர் படகு மற்றும் விசைப்படகு. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    இன்று கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும் வள்ளங்கள் மூலமும் அதிகமான மீன்கள் கிடைக்க வில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து சென்றது,.
    • தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை

    கடலூர்:

    சில மாதங்களாக தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி கடல் சீற்றம், திடீர் மழை போன்றவை நிகழ்கிறது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியாகிறது. கடல் அலை முன்னோக்கி அதிக அளவில் வந்து செல்வதால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி செல்கின்றனர்

    மேலும், கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து செல்கிறது.இந்நிலையில் கடலில் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இன்று காலை முதல் காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை. மேலும், போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.

    • பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
    • வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

    இவர்கள் பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் இன்றும் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுககளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • கன்னியாகுமரி கடல் பகுதியில் வழக்கத்தை விட இன்று காலை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
    • விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு இன்று காலை சுற்றுலா வந்தவர்கள், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண திரண்டனர்.

    அங்கு செல்ல காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும் என்பதால் அவர்கள், படகு குழாமில் பயணச்சீட்டு பெற காலை 6 மணிக்கே வரிசையில் நின்றனர்.

    ஆனால் கன்னியாகுமரி கடல் பகுதியில் வழக்கத்தை விட இன்று காலை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. ராட்சத அலைகள் சுமார் 15 அடி உயரம் வரை எழுந்தது.

    இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    எனவே விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43) மீனவர். இவர் இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோருடன் பைபர் படகில் கொட்டாயமேட்டில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டார். கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதில் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார்.

    நடராஜன், சூரிய மூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூக்குரலிட்டனர். அப்போது அங்கு மற்றொரு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக நடராஜன், சூரியமூர்த்தியை மீட்டு தாங்கள் வந்த படகில் ஏற்றினர். மேலும் பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி கடலோர காவல் குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர். இன்று மதியம் வரை பெருமாளை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே பெருமாள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    மாண்டஸ் புயல், கடல் சீற்றம் உள்ளிட்டவைகளால் 10 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    தென்மேற்கு வங்க க்கடலில் மையம் கொண்டி ருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடல் சீற்றம் காரணமாக சுமார் 30 அடி வரை கடல் அலை முன்னோக்கி வந்து செல்கின்றது. இதன் காரணமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து நள்ளிரவு மற்றும் காலை வரை கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு, சிதம்பரம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு முதல் பனி இருந்த வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவும், குளிரும் இருந்து வருகின்றது. தற்போது கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கி உள்ள தால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவ தோடு, குளிர்ந்த காற்று வீசி வருகின்றது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். தொடர் மழை காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்தவ ஆலை யங்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்ல முடி யாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்ததும் காண முடிந்தது. மேலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடைப்பிடித்த படியும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியும் சென்ற தையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- கடலூர் - 12.3, பரங்கிப்பேட்டை - 4.2, அண்ணாமலை நகர் -3.5, சிதம்பரம் - 2.5, கலெக்டர் அலுவலகம் - 0.2. மொத்தம் - 22.70 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

    பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பே ட்டை, காடாம்புலியூர் ஆகிய இடங்களில் இன்று காலை திடீர் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ள நீராகபெருக்கு பெருக்கெடுத்து ஓடியது.வாகன ஓட்டிகள் சாலை களில் ஊர்ந்து சென்றனர். கடந்த 10 ஆண்டுகாலமாக சாலை பணியை நடக்கா ததால் பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி- கும்பகோணம் சாலை முற்றிலும் சேதமடைந்து மழையில் சேரும் சகதியமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருகிறது.
    • கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால், காரைக்காலில் இருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லா ததால், பெரும்பாலுமான விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றின் கரையோரமும், மீனவ கிராமங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×